ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமான பாலா தற்போது மக்கள் முன்னால் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ், குடிநீர் சுத்திகரிக்கும் கருவி, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை என வரிசையாக செய்து வந்த பாலா அண்மையில் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக சொந்த செலவில் மீண்டும் ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இதற்கிடையில் பாலா செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாகவும், குறிப்பாக அவர் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அரசியல் சக்திகள் இருப்பதாகவும் திராவிட அரசியல் பேசுவோர் சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்தி வந்தனர்.
இதுகுறித்து பதிலளித்துள்ள பாலா, 'நான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாக விமர்சனம் வைக்கிறார்கள். அப்படி பார்த்தால் ஆமாம் இருக்கிறார்கள். என்னவென்றால் அவமானம், கஷ்டம் ஆகியவை தான். இவையெல்லாம் எனக்கு பின்னால் இருப்பதால் தான் நான் இந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறேன்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.