ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சின்னத்திரை உலகில் முடிசூடா ராணியாக வலம் வந்த ராதிகா சரத்குமார், தன்னுடைய ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் சித்தி-2 சீரியலை விட்டு பாதியிலேயே விலகிவிட்ட அவர், அதன்பின் கலைஞர் மற்றும் விஜய் டிவியில் சில சீரியல்களை தயாரிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் அவர் தற்போது புதுப்பொலிவுடன் ஹெச்டி தரத்தில் மீண்டு வந்திருக்கும் பொதிகை தொலைக்காட்சிக்காக ‛தாயம்மா குடும்பத்தார்' என்ற தொடரை தயாரித்து நடிக்கிறார். மேலும், இதில் சந்திரமுகி படத்திலும், வேலன் உள்ளிட்ட சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும் கலக்கிய பிரகர்ஷிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களுக்கான சர்ப்ரைஸாக அமைத்துள்ளது. மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தாயம்மா குடும்பத்தார் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.