சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | என்னை சுயநலத்துக்காக பயன்படுத்துபவர்கள் இன்னும் நல்லா பயன்படுத்திகோங்க : விஜய் சேதுபதி | ஒரு மாதமாக காதல்... 4 மாதத்தில் திருமணம் : விஷால் சொல்கிறார் | பிளாஷ்பேக்: ஆட்டோ சங்கரை உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே நெருக்கமான காட்சிகள் நீக்கம் | நடிகையின் நகைகளை திருடியவர் கைது: ரூ.23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு | சந்தானம் பட வழக்கு முடித்து வைப்பு | வார் 2 படத்தின் முக்கிய அப்டேட் | அனிருத்தை புகழ்ந்த விஜய் தேவரகொண்டா |
சின்னத்திரை உலகில் முடிசூடா ராணியாக வலம் வந்த ராதிகா சரத்குமார், தன்னுடைய ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் சித்தி-2 சீரியலை விட்டு பாதியிலேயே விலகிவிட்ட அவர், அதன்பின் கலைஞர் மற்றும் விஜய் டிவியில் சில சீரியல்களை தயாரிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் அவர் தற்போது புதுப்பொலிவுடன் ஹெச்டி தரத்தில் மீண்டு வந்திருக்கும் பொதிகை தொலைக்காட்சிக்காக ‛தாயம்மா குடும்பத்தார்' என்ற தொடரை தயாரித்து நடிக்கிறார். மேலும், இதில் சந்திரமுகி படத்திலும், வேலன் உள்ளிட்ட சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும் கலக்கிய பிரகர்ஷிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களுக்கான சர்ப்ரைஸாக அமைத்துள்ளது. மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தாயம்மா குடும்பத்தார் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.