22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்ற படத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் ரேகா நாயர். இவர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில், மாகாபா ஆனந்த், ரோஷினி, நடிகை ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் பிரித்திவிராஜ், நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நவீனா என பலரது பெயருடன் ரேகா நாயரின் பெயரும் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்து ரேகா நாயரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, என்னை காட்டுப்பகுதிக்குள் போய் இருக்க சொன்னாலும் கூட இருப்பேன், ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டும் ஒரு நாளும் போக மாட்டேன். இப்படி நூறு நாட்கள் ஒரு வீட்டுக்குள் போய் இருப்பதற்கு பதிலாக 100 மரங்களை நடலாம் என்று கூறி இருக்கும் ரேகா நாயர், கடந்த மூன்று பிக் பாஸ் சீசன்களின்போதும் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக இப்படிதான் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் துளியும் ஆர்வமில்லை என்று கூறி இருக்கிறார் ரேகா நாயர்.