விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை சோனா. அவரது நடிப்பை பாராட்டி நடந்து முடிந்த ஜீ தமிழ் குடும்ப விருது விழாவிலும் சிறந்த வில்லிக்கான விருது சோனாவிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகையுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சோனா அந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். இதனையடுத்து சோனா நடித்து வந்த தாரா கதாபாத்திரத்தில் நடிகை சாதனா நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். சினிமாவில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற சாதனா சின்னத்திரையில் 'தென்றல்' தொடரின் மூலம் அறிமுகமானார். அதில் வில்லியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்ற அவர் தற்போது மாரி தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.