ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை சோனா. அவரது நடிப்பை பாராட்டி நடந்து முடிந்த ஜீ தமிழ் குடும்ப விருது விழாவிலும் சிறந்த வில்லிக்கான விருது சோனாவிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகையுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சோனா அந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். இதனையடுத்து சோனா நடித்து வந்த தாரா கதாபாத்திரத்தில் நடிகை சாதனா நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். சினிமாவில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற சாதனா சின்னத்திரையில் 'தென்றல்' தொடரின் மூலம் அறிமுகமானார். அதில் வில்லியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்ற அவர் தற்போது மாரி தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.