அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த பாக்கியலெட்சுமி தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த சதீஷ் அண்மையில் விலகுவதாக அறிவித்தார். தற்போது அவரை தொடர்ந்து இரண்டாவது நாயகியாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டியும், ராதிகா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பல ரசிகர்களின் கேள்விகளுக்கு ரேஷ்மா பதிலளித்தார். அப்போது ஒருவர் சதீஷ் சீரியலை விட்டு விலகுவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த ரேஷ்மா 'சதீஷ் விலகியது பற்றி உறுதியாக தெரியாது. அடுத்த ஷெட்யூலில் நான் இருந்தால் உங்களுக்கு சொல்கிறேன்' என்று கூறியுள்ளார். இதன்மூலம் சதீஷை போல் ரேஷ்மாவும் சீரியலிலிருந்து விலகிவிட்டாரா? பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.