வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மிகவும் பிரபலமடைந்துவிட்டார். கணவர் தினேஷுடனான சண்டையின் காரணமாக தனியே வசித்து வரும் ரச்சிதா, இப்போதெல்லாம் தனக்காக, தனது மகிழ்ச்சிக்காக மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக சமீபத்திய பதிவுகளில் தெரிவித்து வருகிறார். ஏற்கனவே, தனக்கு பிடித்தமான ராயல் என்பீல்ட் பைக் வாங்கில் அதில் அடிக்கடி ரைட் சென்று வரும் ரச்சிதா, தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். மோரிசன் கேரஜ் கம்பெனியின் சொகுசு ரக காரான அந்த காரின் விலை 22 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கார் வாங்கிய ரச்சிதா, நண்பர்கள் ஷிவின், விஷ்ணு விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். ரச்சிதாவின் கடின உழைப்பை பாராட்டி சக நடிகர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.




