வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மிகவும் பிரபலமடைந்துவிட்டார். கணவர் தினேஷுடனான சண்டையின் காரணமாக தனியே வசித்து வரும் ரச்சிதா, இப்போதெல்லாம் தனக்காக, தனது மகிழ்ச்சிக்காக மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக சமீபத்திய பதிவுகளில் தெரிவித்து வருகிறார். ஏற்கனவே, தனக்கு பிடித்தமான ராயல் என்பீல்ட் பைக் வாங்கில் அதில் அடிக்கடி ரைட் சென்று வரும் ரச்சிதா, தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். மோரிசன் கேரஜ் கம்பெனியின் சொகுசு ரக காரான அந்த காரின் விலை 22 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கார் வாங்கிய ரச்சிதா, நண்பர்கள் ஷிவின், விஷ்ணு விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். ரச்சிதாவின் கடின உழைப்பை பாராட்டி சக நடிகர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.