பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சின்னத்திரை நடிகை ரேகா நாயர் தன் மனதில் பட்ட கருத்தினை மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர். குறிப்பாக பெண்கள் சார்ந்த விஷயங்களிலும், பெண் உரிமை குறித்தும் பலமுறை கருத்துகள் கூறியுள்ளார். சினிமா நடிகைகள் குறித்து அவதூறாக பேசும் பயில்வான் ரங்கநாதன் உட்பட பலரையும் விளாசி வருகிறார். ரேகாவின் கருத்துகளை சிலர் ஆதரித்தாலும், பலர் அவரை மிகவும் மோசமான முறையில் விமர்சித்து வருகின்றனர். அவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களை கூட தவறான முறையில் மார்பிங் செய்து அவரை கொச்சையாக சித்தரித்து வருகின்றனர். மேலும் அவரது பெயரில் போலியான சமூகவலைதள கணக்குகளை தொடங்கி தவறான வழியிலும் பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரேகா.
அதில் அவர் 'தினந்தோறும் நான் செய்கிற செயல்களை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியிடுவது யாருக்கேனும் அது பயன்படும் என்கிற நல்ல நோக்கத்தில் மட்டும் தான். அதை நீங்கள் எப்படி வேண்டுமானால் நினைத்துக் கொள்ளுங்கள் கமெண்ட் அடித்து கொள்ளுங்கள். அதற்காக நான் தூக்குப்போட்டு சாகப்போவது கிடையாது. ஆனால் அதை பயன்படுத்தி பேக் ஐடிக்களை உருவாக்கி தவறான முறையில் சிலர் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் என் கைகளில் கிடைத்தால் வேறுமாதிரி ஆகிவிடும். நான் மிரட்டவில்லை. அது எப்பேற்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி' என்று எச்சரித்துள்ளார்.