பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

டிவி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி, விஜய் டிவியின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். ஆனால், அவர் நடித்த சீரியல்கள் அனைத்துமே பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வெள்ளித்திரையிலும் 2015ம் ஆண்டிலேயே 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இந்நிலையில், புதிய வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த சரண்யா தற்போது தனது ரூட்டை மாற்றி பைக் ரைடராக மாறியுள்ளார். ஒரு புரொபஷனல் ரைடர் போல உடுப்புகளை மாட்டிக்கொண்டு பிஎம்டபிள்யூ, ராயல் என்பீல்டு காண்டினெண்டல் என உயர்ரக பைக்குகளில் ஊர் ஊராக டூரிங் சென்று கொண்டிருக்கிறார். சரண்யாவை திரையில் பார்க்கமுடியாத ரசிகர்கள் பலரும் 'இனி நடிக்க வரமாட்டீங்களா?' என ஏக்கத்துடன் அவரை கேட்டு வருகின்றனர்.