சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
டிவி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி, விஜய் டிவியின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். ஆனால், அவர் நடித்த சீரியல்கள் அனைத்துமே பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வெள்ளித்திரையிலும் 2015ம் ஆண்டிலேயே 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இந்நிலையில், புதிய வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த சரண்யா தற்போது தனது ரூட்டை மாற்றி பைக் ரைடராக மாறியுள்ளார். ஒரு புரொபஷனல் ரைடர் போல உடுப்புகளை மாட்டிக்கொண்டு பிஎம்டபிள்யூ, ராயல் என்பீல்டு காண்டினெண்டல் என உயர்ரக பைக்குகளில் ஊர் ஊராக டூரிங் சென்று கொண்டிருக்கிறார். சரண்யாவை திரையில் பார்க்கமுடியாத ரசிகர்கள் பலரும் 'இனி நடிக்க வரமாட்டீங்களா?' என ஏக்கத்துடன் அவரை கேட்டு வருகின்றனர்.