கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'வித்யா நம்பர் 1' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்து வருகிறது. இதில் தேஜஸ்வனி கவுடா, நிஹாரிகா ஹர்ஷூ, புவியரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பான கதைக்களத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மேலும் சுவராசியத்தை கூட்டும் வகையில் நீதிமன்றம் எபிசோடுகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதில், பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் நீதிபதி கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். பாக்யராஜ் படங்களில் நீதிமன்ற காட்சிகள் என்றாலே மிகவும் காமெடியாகவும், அதேசமயம் புத்திசாலித்தனமான வாதங்களும் இருக்கும். தற்போது அவரே நீதிபதியாக கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
சீரியலின் டிஆர்பியிலும் பாக்யராஜ் என்ட்ரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாகவே சித்தி 2, ராஜா ராணி, செந்தூரப்பூவே ஆகிய தொடர்களில் பாக்யராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.