பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'வித்யா நம்பர் 1' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்து வருகிறது. இதில் தேஜஸ்வனி கவுடா, நிஹாரிகா ஹர்ஷூ, புவியரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பான கதைக்களத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மேலும் சுவராசியத்தை கூட்டும் வகையில் நீதிமன்றம் எபிசோடுகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதில், பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் நீதிபதி கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். பாக்யராஜ் படங்களில் நீதிமன்ற காட்சிகள் என்றாலே மிகவும் காமெடியாகவும், அதேசமயம் புத்திசாலித்தனமான வாதங்களும் இருக்கும். தற்போது அவரே நீதிபதியாக கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
சீரியலின் டிஆர்பியிலும் பாக்யராஜ் என்ட்ரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாகவே சித்தி 2, ராஜா ராணி, செந்தூரப்பூவே ஆகிய தொடர்களில் பாக்யராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.