இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'வித்யா நம்பர் 1' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்து வருகிறது. இதில் தேஜஸ்வனி கவுடா, நிஹாரிகா ஹர்ஷூ, புவியரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பான கதைக்களத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மேலும் சுவராசியத்தை கூட்டும் வகையில் நீதிமன்றம் எபிசோடுகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதில், பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் நீதிபதி கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். பாக்யராஜ் படங்களில் நீதிமன்ற காட்சிகள் என்றாலே மிகவும் காமெடியாகவும், அதேசமயம் புத்திசாலித்தனமான வாதங்களும் இருக்கும். தற்போது அவரே நீதிபதியாக கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
சீரியலின் டிஆர்பியிலும் பாக்யராஜ் என்ட்ரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாகவே சித்தி 2, ராஜா ராணி, செந்தூரப்பூவே ஆகிய தொடர்களில் பாக்யராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.