பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சின்னத்திரை வில்லி நடிகையான வந்தனா மைக்கேல் தற்போது மீண்டும் வில்லியாக ரீ- என்ட்ரி கொடுக்கிறார். ஆனந்தம் தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாக வந்தனா தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்திலும் தொடர்ந்து கேரக்டர் ரோலில் நடித்து வந்தார். 'வம்சம்' தொடரில் முதன்முறையாக வில்லியாக நடித்த போது அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதனைதொடர்ந்து 'கல்யாணம் முதல் காதல் வரை', 'மெல்ல திறந்தது கதவு', 'பொன்மகள் வந்தாள்' ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து அதிகம் பிரபலமானார். இடையில் சிறிது காலம் நடிப்புக்கு பிரேக் விட்டிருந்த வந்தனா தற்போது மகராசி சீரியலில் மீண்டும் வில்லியாக நடிக்கிறார். இந்த தொடரில் ஏற்கனவே நடித்து வரும் நடிகர் ரியாஸ் கானின் மனைவியாக வந்தனா நடிக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. வந்தனாவின் ரீ-என்ட்ரியை அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.




