பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சின்னத்திரை வில்லி நடிகையான வந்தனா மைக்கேல் தற்போது மீண்டும் வில்லியாக ரீ- என்ட்ரி கொடுக்கிறார். ஆனந்தம் தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாக வந்தனா தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்திலும் தொடர்ந்து கேரக்டர் ரோலில் நடித்து வந்தார். 'வம்சம்' தொடரில் முதன்முறையாக வில்லியாக நடித்த போது அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதனைதொடர்ந்து 'கல்யாணம் முதல் காதல் வரை', 'மெல்ல திறந்தது கதவு', 'பொன்மகள் வந்தாள்' ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து அதிகம் பிரபலமானார். இடையில் சிறிது காலம் நடிப்புக்கு பிரேக் விட்டிருந்த வந்தனா தற்போது மகராசி சீரியலில் மீண்டும் வில்லியாக நடிக்கிறார். இந்த தொடரில் ஏற்கனவே நடித்து வரும் நடிகர் ரியாஸ் கானின் மனைவியாக வந்தனா நடிக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. வந்தனாவின் ரீ-என்ட்ரியை அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.