ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வீஜேவாக தனது கேரியரை ஆரம்பித்த காஜல் பசுபதி, ஆரம்ப காலக்கட்டங்களில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். கடைசியாக அவர் 2009ம் ஆண்டு ராடன் நிறுவனம் தயாரித்த அரசி சீரியலில் நடித்தார். அதன்பிறகு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்திய காஜல், சீரியல் பக்கம் திரும்பவேயில்லை. அதேசமயம் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே, சமீப காலங்களில் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க கிளாமர் யுக்திகளையும் கையாண்டு வருகிறார். ஆனால், இதற்கிடையில் சீரியல் நடிகைகள் எல்லாம் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வர ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்கள் மூவருமே சீரியலில் நடித்து அதன் பிறகு தான் சினிமா வாய்ப்பை பெற்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த காஜல் பசுபதி, மைனா நந்தினிக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார். அதேசமயம் தன்னுடைய மற்றொரு பதிவில், 'கமல் சார் படத்தில 3 பேருமே சீரியல் ஆர்டிட்ஸ்ட்டா? விஜய்சேதுபதிக்கு ஜோடியா? சூப்பர் ஜி சூப்பர். இதுக்கு நாங்களும் சீரியலே பண்ணியிருக்கலாம் போல!!' என வருத்தமாக பதிவிட்டுள்ளார்.