மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

ஜீ தமிழ் டிவியில் தொடர்ச்சியாக புத்தம் புதிய தொடர்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. அந்தவகையில் ஏப்., 18 முதல் 'தவமாய் தவமிருந்து' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. பிரபல நடிகர்கள் 'பசங்க' சிவகுமார் மற்றும் அனிதா ஆகியோர் இதில் மார்க்கண்டேயன் மற்றும் பார்வதியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நமது வாழ்க்கையோடு நெருங்கிய கதையாக மட்டுமில்லாமல், 'தவமாய் தவமிருந்து' நல்ல ஒரு பொழுதுபோக்காகவும்; வாழ்க்கை விடுக்கும் அனைத்து சவால்களையும் அவர்கள் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார்கள் என்பதன் மூலம் மக்களுக்கு நல்ல கருத்தினையும் கூற உள்ளது.
தங்களது நான்கு பிள்ளைகளான - ரேவதி, ராஜேந்திரன், ரவி மற்றும் மலர் ஆகியோரை வளர்த்து ஆளாக்க தங்கள் வாழ்க்கையை முழுவதையும் அர்ப்பணிக்கும் தம்பதியான மார்க்கண்டேயன் மற்றும் பார்வதி ஆகியோரது கதையே 'தவமாய் தவமிருந்து'. எல்லா பெற்றோர்களை போலவும் தங்களது குழந்தைகளுக்காக தன்னலமின்றி அனைத்தையும் அவர்கள் வழங்குகிறார்கள். ஆனால் மார்க்கண்டேயனின் பணி ஓய்விற்குப் பிறகு அவர்களது பிள்ளைகளால் கைவிடப்படுகிறார்கள். அந்த தம்பதியினர் அச்சமின்றி எப்படி தங்கள் சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள்; அவர்களின் இளைய மகள் அந்த பெற்றோருக்கு எப்படி நம்பிக்கை விளக்காக இருக்கிறாள். தன் பெற்றோரது வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயத்தை எப்படி அவள் வெற்றிகரமான ஒன்றாக மாற்ற உதவுகிறாள் என்பதே இதன் சுவாரஸ்யமான கதைக்களமாகும்.
மனதைத் தொடும் இந்த மார்க்கண்டேயன் மற்றும் பார்வதியின் உணர்வுபூர்ணமான கதையான 'தவமாய் தவமிருந்து' தொடரை ஏப்ரல் 18 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஜீ தமிழில் கண்டு மகிழுங்கள்.