கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களில் பிரபலமான போட்டியாளர்களை வைத்து ஆரம்பம் முதலே அசத்தாலாக தொடங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் 'உங்களுக்கென்ன வேலை' என்ற டாஸ்க் நடைபெற்றது. அதில் பேசிய ஜூலி, 'பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றவுடன், ஒரு தொண்டு நிறுவனத்தில் இருக்கும் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சுமார் 23 லட்சம் பணம் தேவைப்படுவதாக தெரிய வந்தது. நான் நண்பர்கள் மற்றும் சோஷியல் மீடியா உதவியுடன் அக்குழந்தையின் மருத்துவ செலவுக்கான பணத்தை சேகரித்து கொடுத்தேன். தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது. இந்த விஷயத்தை இன்று வரை நான் யாரிடமும் சொன்னதில்லை. எங்களுக்கு சொந்தவீடு கூட கிடையாது. இருப்பினும் இது போன்ற சமூக தொண்டாற்றுவது மனதிற்கு நெகிழ்வை தருகிறது' என கூறியுள்ளார்.
மேலும், 'ஒருவர் செய்யும் நல்ல செயல் வெளியே வராது. ஆனால், அவர்கள் செய்யும் சிறு தவறு கூட வைரலாக பரவி, சமூகத்தில் அவரை கேலிக்கூத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது' எனவும் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரமங்கை, போராளி என பெயரெடுத்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொய்யாக நடித்ததால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் இன்று வரை ஜூலியை சோஷியல் மீடியாவில் நெட்டீசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.