ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் ரக்ஷா ஹோலா. பெங்களூரை சேர்ந்த ரக்ஷா, நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் கதாநாயகியாக தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார். அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அந்த தொடர் புதிய மாற்றங்களுடன் ஒளிபரப்ப தொடங்கிய போது, ரக்ஷா ஹோலா தொடரிலிருந்து விலகினார். இதனையடுத்து அவர் ஜீ தமிழின் 'அன்பே சிவம்' தொடரில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே சிவம் தொடரும் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது ரக்ஷா ஹோலா அதிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விலகியதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அவர் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற தகவலை தொலைக்காட்சி நிறுவனம் மிக விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




