ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கன்னட மொழியை சிறுமைப்படுத்தவில்லை : நடக்கும் பிரச்னை வேதனை அளிப்பதாக கமல் அறிக்கை | பரமசிவன் பாத்திமாவுக்கு மறு தணிக்கையில் 'ஏ ' சான்றிதழ் | பிளாஷ்பேக்: ஹீரோயின்கள் ஆன லலிதா, பத்மினி | தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி | பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீரியல்களில் ஒன்று ராஜபார்வை. இதில் நடிகர் முன்னா மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் புகழ் ராஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதன் டைட்டிலும், ஹீரோவுக்கு கண் தெரியாத என்ற கான்செப்ட்டும் தான் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. ஆனால், சீரியல் ஆரம்பித்து சில நாட்களிலேயே அனைவருக்கும் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த அளவுக்கு சுவாரசியம் இல்லாத கதை ஓட்டம், திரைக்கதை காரணமாக பலருக்கு இந்த சீரியலை பிடிக்கவில்லை. இதன் சுவாரசியத்தை கூட்டுவதற்காக நடிகை ஆனந்தி இந்த சீரியலில் இணைந்தார். இருப்பினும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாத காரணத்தல் சீரியலை நிறுத்திவிட்டனர். 207 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான ராஜபார்வை சீரியல் டிசம்பர் 18 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலும் ரக்ஷிதா விலகிய பின் சறுக்கலாக சென்று கொண்டிருக்கிறது. எனவே, அதையும் முடித்து வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் வைதேகி காத்திருந்தாள், ஈரமான ரோஜாவே 2 ஆகிய இரண்டு புதிய சீரியல்கள் விரைவில் வெளியாகிறது.