தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீரியல்களில் ஒன்று ராஜபார்வை. இதில் நடிகர் முன்னா மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் புகழ் ராஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதன் டைட்டிலும், ஹீரோவுக்கு கண் தெரியாத என்ற கான்செப்ட்டும் தான் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. ஆனால், சீரியல் ஆரம்பித்து சில நாட்களிலேயே அனைவருக்கும் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த அளவுக்கு சுவாரசியம் இல்லாத கதை ஓட்டம், திரைக்கதை காரணமாக பலருக்கு இந்த சீரியலை பிடிக்கவில்லை. இதன் சுவாரசியத்தை கூட்டுவதற்காக நடிகை ஆனந்தி இந்த சீரியலில் இணைந்தார். இருப்பினும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாத காரணத்தல் சீரியலை நிறுத்திவிட்டனர். 207 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான ராஜபார்வை சீரியல் டிசம்பர் 18 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலும் ரக்ஷிதா விலகிய பின் சறுக்கலாக சென்று கொண்டிருக்கிறது. எனவே, அதையும் முடித்து வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் வைதேகி காத்திருந்தாள், ஈரமான ரோஜாவே 2 ஆகிய இரண்டு புதிய சீரியல்கள் விரைவில் வெளியாகிறது.