‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி |
நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்ததாக அறிவித்தவுடன் நடிகர் சித்தார்த் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "ஏமாற்றுபவர்கள் எப்போதும் முன்னேறுவதில்லை என்று என் ஆசிரியர் கற்றுக் கொடுத்திருக்கிறார்" என்று பதிவிட்டிருந்தார்.
சித்தார்தின் டுவீட் சமந்தாவை குறிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. சித்தார்த் மற்றும் சமந்தா இருவரும் சில காலம் காதலில் இருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தா பின்னர் தான் நாகசைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.
சித்தார்த் வெளியிட்ட அந்தப் பதிவிற்கு பல கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சித்தார்த் தன் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். "ஒவ்வொரு நாளும் நான் என் மனதில் தோன்றுவதை டுவீட் செய்கிறேன், தெருநாய்களைப் பற்றி நான் டுவீட் செய்தால், அது அவர்களுக்கானது என்று மக்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல" என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மேலும் "தனது டுவீட்களை தேவையற்ற சர்ச்சைகளுக்குள் இழுத்து பெரியதாக ஆக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். "என் வாழ்க்கையில் விரும்பாதவர்களை விட நான் என் வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன். எனவே ஊடகங்களின் வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை” என்றும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.