சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்முறையாக ஒடிடி தளத்தில் பிக்பாஸ் (ஹிந்தி) நிகழ்ச்சி துவங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்-8ல் துவங்கிய இந்த ஒடிடி பிக்பாஸ் சீசன் செப்-18 அன்று நிறைவு பெற்றது. மொத்தம் 42 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 13 போட்டியாளர்களில் திவ்யா அகர்வால் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதே திவ்யா அகர்வால் தான், பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர்கள் சிலருடன் மோதல் போக்கை கடைபிடித்தார் என்று கரண் ஜோஹரிடம் அவ்வப்போது குட்டுக்கள் வாங்கினார். இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கரண் ஜோஹரை கோபப்படுத்தியதால் அவரது பட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது என நினைக்கிறீர்களா என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த திவ்யா அகர்வால், “எனது வேலை சரியாக இருக்கும் பட்சத்தில் கரண் ஜோஹர் படத்தில் நடித்துதான் எனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை” என அதிரடியாக கூறினார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சட்டென்று, “நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் கரண் ஜோஹரின் படங்களாக தேடிப்பிடித்து பார்ப்பேன்” என அவருக்கு ஐஸ் வைக்கவும் செய்தார்.