சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
தொண்ணூறுகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் டான்சராக அறிமுகமாகி, அதன்மூலம் கிடைத்த புகழால் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிரபுதேவா, நடிப்புத்துறைக்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் இயக்குனர் அவதாரம் எடுத்து ஒன்றிரண்டு ஹிட் படங்கள் கொடுத்த பிரபுதேவா பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்டு டைரக்சனில் மட்டும் கவனம் செலுத்தினார்.
பின்னர் ஒரு கட்டத்தில் டைரக்சனில் தொய்வு ஏற்படவே பீல்டில் நிலைத்து நிற்பதாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பிரபுதேவா. இப்போதுகூட அவர் நடித்துள்ள பொன்மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா உட்பட நான்கு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் டைரக்சனை விட அவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கவே செய்கிறது.
இந்தநிலையில் டைரக்சனில் தொடர்ந்து சரிவையே சந்தித்துவரும் பிரபுதேவா, கடைசியாக இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய தபாங்-3, ராதே இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. அதனால் இனி டைரக்சனுக்கு குட்பை சொல்லிவிட்டு முழு நேர நடிகராக தனது சினிமா பயணத்தை தொடர முடிவு செய்துள்ளாராம் பிரபுதேவா.