கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
தொண்ணூறுகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் டான்சராக அறிமுகமாகி, அதன்மூலம் கிடைத்த புகழால் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிரபுதேவா, நடிப்புத்துறைக்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் இயக்குனர் அவதாரம் எடுத்து ஒன்றிரண்டு ஹிட் படங்கள் கொடுத்த பிரபுதேவா பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்டு டைரக்சனில் மட்டும் கவனம் செலுத்தினார்.
பின்னர் ஒரு கட்டத்தில் டைரக்சனில் தொய்வு ஏற்படவே பீல்டில் நிலைத்து நிற்பதாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பிரபுதேவா. இப்போதுகூட அவர் நடித்துள்ள பொன்மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா உட்பட நான்கு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் டைரக்சனை விட அவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கவே செய்கிறது.
இந்தநிலையில் டைரக்சனில் தொடர்ந்து சரிவையே சந்தித்துவரும் பிரபுதேவா, கடைசியாக இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய தபாங்-3, ராதே இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. அதனால் இனி டைரக்சனுக்கு குட்பை சொல்லிவிட்டு முழு நேர நடிகராக தனது சினிமா பயணத்தை தொடர முடிவு செய்துள்ளாராம் பிரபுதேவா.