20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தொண்ணூறுகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் டான்சராக அறிமுகமாகி, அதன்மூலம் கிடைத்த புகழால் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிரபுதேவா, நடிப்புத்துறைக்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் இயக்குனர் அவதாரம் எடுத்து ஒன்றிரண்டு ஹிட் படங்கள் கொடுத்த பிரபுதேவா பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்டு டைரக்சனில் மட்டும் கவனம் செலுத்தினார்.
பின்னர் ஒரு கட்டத்தில் டைரக்சனில் தொய்வு ஏற்படவே பீல்டில் நிலைத்து நிற்பதாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பிரபுதேவா. இப்போதுகூட அவர் நடித்துள்ள பொன்மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா உட்பட நான்கு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் டைரக்சனை விட அவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கவே செய்கிறது.
இந்தநிலையில் டைரக்சனில் தொடர்ந்து சரிவையே சந்தித்துவரும் பிரபுதேவா, கடைசியாக இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய தபாங்-3, ராதே இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. அதனால் இனி டைரக்சனுக்கு குட்பை சொல்லிவிட்டு முழு நேர நடிகராக தனது சினிமா பயணத்தை தொடர முடிவு செய்துள்ளாராம் பிரபுதேவா.