ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஏழு நகரங்களை ஒன்றிணைத்துள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும், வசிக்க கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் சாதித்த வெகு சிலருக்கு மட்டுமே வழங்கி வருகிறது ஐக்கிய அரபு அமீரக அரசு.
அந்தவகையில் கேரளாவின் அடையாளமாக திகழும் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் சமீபத்தில் கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அதை தொடர்ந்து முன்னணி நடிகராக வளர்ந்து வரும் டொவினோ தாமஸும் கோல்டன் விசா பெற்றார்.
இந்த நிலையில் தந்தை மம்முட்டியை தொடர்ந்து மகன் துல்கர் சல்மானுக்கும் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு. இந்த தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள துல்கர் சல்மான், “எதிர்காலத்தில் அபுதாபி அரசு சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் இன்னும் அதிக கவனம் எடுத்து திட்டங்களை செயல்படுத்தப் போவதாக கூறியுள்ளனர். அந்தவகையில் வரும் காலங்களில் சினிமா தொடர்பாக அதிக நாட்கள் இங்கேயே செலவிடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என கூறியுள்ளார்