கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் என்பவர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா ரவி நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. பாக்யராஜ், யோகிபாபு, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்ததுடன் நடிக்கவும் செய்துள்ளார்.
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சாந்தனு, அதுல்யா, மிர்ச்சி சிவா, யோகிபாபு, ரவீந்தர் சந்திரசேகர், ஸ்ரீஜர், தருண் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சாந்தனு பேசும்போது : இந்தப் படம் பார்க்கும் போது லாஜிக் இல்லாமல் பார்த்தால் ரெண்டு மணி நேரம் நல்லா குடும்பத்தோட உட்கார்ந்து சிரிக்கலாம். இந்தப் படம் அடல்ட் படம் என்று நிறைய பேர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கிடையாது. இது குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக் கூடிய எண்டெர்டெயின்மெண்ட் படம். ஒருத்தர் ஜெயிக்கனும் என்றால் அவர் மட்டுமே நினைத்தால் மட்டும் போதாது. குறைந்தது 10 பேராவது நினைக்க வேண்டும். நீங்கள் அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பேசினார்.
அதுல்யா ரவி பேசிய போது, "சாந்தனு மிகவும் இனிமையான நடிகர். படப்பிடிப்பில் இருக்கும் போது சில சில குறிப்புகள் கொடுப்பார். படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வோம். எப்போதும் ஊக்குவிக்கும் வகையில் பேசக்கூடியவர். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு திருப்புமுனையாக இருக்கும். இந்த படம் கண்டிப்பா முழுவதுமாக நகைச்சுவை கலாட்டா நிறைந்த படமாக இருக்கும். நான் படம் முழுக்க பார்க்கவில்லை ஆனால் டப்பிங் செய்தும் மிகவும் ரசித்து செய்தோம். " என்று கூறினார்.