ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு | பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்? | 'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் | மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ் | 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி | உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி' | 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!! | டபுள் பிளாக்பஸ்டர் ஆன 'திரிஷ்யம் 3' | இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம் | முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா |

சுதா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டில் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரை போற்று. இப்படத்தை ஹிந்தியிலும் சுதா இயக்கத்தில் ரீமேக் செய்யப் போவதாக சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் சூரரைப்போற்று படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில் 2 டி என்டர்டைன்மென்ட் நிறுவனமும், அபுன் தாண்டியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்து தடை கோரியது.
அதை தொடர்ந்து அப்படத்திற்கு தற்காலிகமாக தடை விதித்தது நீதிமன்றம். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சூரரைப்போற்று படத்தை தயாரித்த 2 டி எண்டர்டெயின்மெண்ட் தாக்கல் செய்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டு அப்படத்தின் மீது தொடரப்பட்டிருந்தது தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.




