சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

சுதா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டில் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரை போற்று. இப்படத்தை ஹிந்தியிலும் சுதா இயக்கத்தில் ரீமேக் செய்யப் போவதாக சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் சூரரைப்போற்று படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில் 2 டி என்டர்டைன்மென்ட் நிறுவனமும், அபுன் தாண்டியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்து தடை கோரியது.
அதை தொடர்ந்து அப்படத்திற்கு தற்காலிகமாக தடை விதித்தது நீதிமன்றம். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சூரரைப்போற்று படத்தை தயாரித்த 2 டி எண்டர்டெயின்மெண்ட் தாக்கல் செய்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டு அப்படத்தின் மீது தொடரப்பட்டிருந்தது தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.