ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுதா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டில் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரை போற்று. இப்படத்தை ஹிந்தியிலும் சுதா இயக்கத்தில் ரீமேக் செய்யப் போவதாக சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் சூரரைப்போற்று படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில் 2 டி என்டர்டைன்மென்ட் நிறுவனமும், அபுன் தாண்டியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்து தடை கோரியது.
அதை தொடர்ந்து அப்படத்திற்கு தற்காலிகமாக தடை விதித்தது நீதிமன்றம். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சூரரைப்போற்று படத்தை தயாரித்த 2 டி எண்டர்டெயின்மெண்ட் தாக்கல் செய்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டு அப்படத்தின் மீது தொடரப்பட்டிருந்தது தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.