சிம்பு படத்தில் மிருணாள் தாக்கூர் சந்தானம் | திலீப் படத்தை இயக்குகிறேனா? 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் மறுப்பு | 'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதியில் தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? |

கன்னட சினிமாவின் இளம் நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீர் மாரடைப்பால் இறந்தார். அவரின் மரணம் குடும்பத்தினரை மட்டுமல்லாது, திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை தான். காதல் சொல்ல வந்தேன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு பெயர்சூட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என்று பெயர் வைத்துள்ளனர். நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மேக்னா ராஜ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.பெயர்சூட்டு விழாவில் நடிகை நஸ்ரியா கலந்து கொண்டார். நஸ்ரியாவும், மேக்னாவும் நெருங்கிய தோழிகள். மேக்னாவுக்கு குழந்தை பிறந்தபோது தன் கணவர் பஹத் பாசிலுடன் மருத்துவமனைக்கு வந்தார் நஸ்ரியா.
பெயர்சூட்டு விழாவில் சிரஞ்சீவியும், மேக்னாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பழைய வீடியோக்களை வெளியிட்டனர். தன் குழந்தைக்கு பெயர் வைப்பதை பார்க்க கணவர் உயிருடன் இல்லையே என்பதை நினைத்து மேக்னா கண்கலங்கிவிட்டார். மறைந்த சிரஞ்சீவியே மகனாக பிறந்திருப்பதாக அவரின் குடும்பத்தினர் அனைவரும் கருதுகிறார்கள்.




