திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
கன்னட சினிமாவின் இளம் நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீர் மாரடைப்பால் இறந்தார். அவரின் மரணம் குடும்பத்தினரை மட்டுமல்லாது, திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை தான். காதல் சொல்ல வந்தேன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு பெயர்சூட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என்று பெயர் வைத்துள்ளனர். நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மேக்னா ராஜ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.பெயர்சூட்டு விழாவில் நடிகை நஸ்ரியா கலந்து கொண்டார். நஸ்ரியாவும், மேக்னாவும் நெருங்கிய தோழிகள். மேக்னாவுக்கு குழந்தை பிறந்தபோது தன் கணவர் பஹத் பாசிலுடன் மருத்துவமனைக்கு வந்தார் நஸ்ரியா.
பெயர்சூட்டு விழாவில் சிரஞ்சீவியும், மேக்னாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பழைய வீடியோக்களை வெளியிட்டனர். தன் குழந்தைக்கு பெயர் வைப்பதை பார்க்க கணவர் உயிருடன் இல்லையே என்பதை நினைத்து மேக்னா கண்கலங்கிவிட்டார். மறைந்த சிரஞ்சீவியே மகனாக பிறந்திருப்பதாக அவரின் குடும்பத்தினர் அனைவரும் கருதுகிறார்கள்.