ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதிஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். அண்ணாத்த படத்தை அடுத்து ரஜினி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவியது.
இந்நிலையில், ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாண்டிராஜ் தற்போது சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை அடுத்து அவர் ரஜினி உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.