20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு |

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி சர்வைவர். தனி தீவில் விடப்படும் போட்டியாளர்கள் 100 நாட்கள் காட்டில் தங்கி இருக்க வேண்டும். 100 நாளை நிறைவு செய்யும் போட்டியாளருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் ஒரு தனித்த தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கள் அச்சத்தினை தைரியமாக எதிர்கொண்டு, கடும் சவால்களைக் கடந்து தங்கள் பயணத்தைத் தொடர மேற்கொள்ளும் போராட்டங்களை நேயர்கள் காணலாம். களமிறங்கும் போட்டியாளர்களின் ஆற்றல், தைரியம், விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் ஒரு அசல் போட்டியாக இந்த நிகழ்ச்சி இருக்கும். என்கிறார் அர்ஜூன்.