நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி சர்வைவர். தனி தீவில் விடப்படும் போட்டியாளர்கள் 100 நாட்கள் காட்டில் தங்கி இருக்க வேண்டும். 100 நாளை நிறைவு செய்யும் போட்டியாளருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் ஒரு தனித்த தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கள் அச்சத்தினை தைரியமாக எதிர்கொண்டு, கடும் சவால்களைக் கடந்து தங்கள் பயணத்தைத் தொடர மேற்கொள்ளும் போராட்டங்களை நேயர்கள் காணலாம். களமிறங்கும் போட்டியாளர்களின் ஆற்றல், தைரியம், விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் ஒரு அசல் போட்டியாக இந்த நிகழ்ச்சி இருக்கும். என்கிறார் அர்ஜூன்.