பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை ஓடிடியில வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் நடித்துள்ள பல கேரக்டர்கள் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு 1970களில் வட சென்னையில் நடைபெற்று வந்த குத்துச்சண்டை கதையை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் ரஞ்சித்.
இந்நிலையில் இப்படத்தில் மாரியம்மாள் என்ற நாயகி வேடத்தில் நடித்துள்ள துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரையில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து கூறுகையில், ரஞ்சித் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்து விட்டேன். ஆனால் தொடர்ந்து17முறை அழைப்பு வந்தபோதுதான் அது உண்மையான போன்கால் தான் என்று தெரிந்தது. பின்னர் பா.ரஞ்சித்தின் அலுவலகத்திற்கு சென்று அவரிடத்தில் மன்னிப்பு கேட்டேன்.
அதையடுத்து என்னிடத்தில் மாரியம்மாள் கேரக்டர் பற்றி சொன்ன டைரக்டர், ஒரு காட்சியில் நடித்துக்காட்டுமாறும் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு போட்டோ சூட்டில் என்னை மாரியம்மாளாகவே மாற்றிய இயக்குனர், படத்திலும்அந்த கதாபாத்திரமாகவே வாழ வைத்து விடடார். அதற்காக பா.ரஞ்சித்துக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சார்பட்டா பரம்பரை படத்திற்கும், எனது கேரக்டருக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இப்படியொரு கேரக்டரில் நடிக்கத்தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். எனது கனவை டைரக்டர் ரஞ்சித் நனவாக்கி விட்டார். இப்போது கிடைத்துள்ள பாராட்டு இனிமேல் படத்திற்கும் படம் இன்னும் சிறப்பான நடிப்பை கொடுக்க வேண்டும் என்கிற உற்சாகத்தை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் துஷாரா விஜயன்.