மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ஒருவர் மட்டுமே நடிக்கும் படங்கள் அவ்வப்போது பரிசோதனை முயற்சியாக வெளிவரும். கடைசியாக பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படம் இந்த வகையை சேர்ந்தது. அதேபோன்ற ஒரு படத்தில் தற்போது வெயில் பிரியங்கா நடித்து வருகிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தை அபிலாஷ் புருஷோத்தமன் தயாரித்து, இயக்குகிறார். பிரதாப் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார், தீபன்குரன் கைதப்ரம் இசை அமைக்கிறார்.
பிரியங்கா கூறியிருப்பதாவது: ஒற்றை கதாபாத்திரத் திரைப்படங்கள் சினிமாவில் மிகவும் அரிதானவை. சவாலானது என்றாலும் அதை செய்வது ஒரு கலைஞருக்கு மன திருப்பி அளிப்பதாகும். மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிராணா என்ற படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த படம் இந்தியாவில் 6 வது படமாகும். ஒரு இக்கட்டான சூழ்நிலை ஒன்றை ஒரு பெண் சந்திக்கும்போது அவள் தன்னை காப்பாற்றிக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறாள் என்பதுதான் படத்தின் கண்டன்ட். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது, என்றார்.




