ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் தான் இயக்கி வந்த 'இந்தியன் 2' படம் நீதிமன்ற வழக்கில் இருப்பதால் அப்படத்தை அப்படியேவிட்டுவிட்டு, தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். அப்படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகளை தற்போது ஐதராபாத்தில் செய்து வருகிறார். படத்திற்கான பாடல் பதிவுகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இன்று படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2016ல் வெளிவந்த 'எம்எஸ் தோனி' படம் மூலம் பிரபலமானவர் கியாரா. தொடர்ந்து சில தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 'ஷெர்ஷா' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். 'பூல் புலையா 2, ஜக் ஜக் ஜீயோ, மிஸ்டர் லீலி' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
ஷங்கர், ராம்சரண் முதல் முறையாக இணையும் புதிய தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்து ஷங்கர் ஹிந்தியில் இயக்க உள்ள 'அந்நிய்ன' படத்தின் ரீமேக்கிலும் கியாராதான் கதாநாயகி என்று ஏற்கெனவே செய்திகள் வெளி வந்துள்ளன. இரு படங்களுக்காகவும்தான் கியாராவை ஒப்பந்தம் செய்துள்ளார் ஷங்கர் என்கிறார்கள்.