'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

சில தினங்களுக்கு முன்பு நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மாமல்லபுரம் அருகே அதிவேகமாக சென்ற போது நள்ளிரவு 1 மணியளவில் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் யாஷிகா மற்றும் அவருடன் பயணித்த மூவரில் ஆண் நண்பர்கள் இருவர் படுகாயமடைந்தனர். துரதிருஷ்டவசமாக யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் அதிவேகமாக கார் ஓட்டி வந்த யாஷிகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விபத்தில் அவருக்கு இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளாராம். விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.




