சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… |

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த வேணு, முத்து எங்கள் சொத்து படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன்பிறகு அந்த ஒரு நிமிடம், படிக்காத பண்ணையார், அலைபாயுதே, நரசிம்மா, வல்லவன், வேகம் உள்பட பல படங்களில் நடித்தார். சபாஷ் சரியான போட்டி என்ற படத்தை இயக்கினார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரை பக்கம் வந்தார். அலைகள், ஆடுகிறான் கண்ணன், காசளவு நேசம், காஸ்ட்லி மாப்பிள்ளை, கிரீன் சிக்னல், ரிஷிமூலம், வாழ்க்கை உள்பட 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்தார். கடைசியாக ராதிகாவின் சந்திரகுமாரியில் நடித்தார். ராதிகாவின் வாணி ராணி சீரியலில் அவரின் கணவராக நடித்திருந்தார்.
வேணு அரவிந்துக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது.
அதன்பிறகு எதிர்பாராத வகையில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் விரைவில் குணமாகி வர வேண்டும் என திரையுலகினரும், ரசிகர்களும் கடவுளிடன் வேண்டி வருகின்றனர்




