டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 39-வது படத்தில் நடித்துள்ளார். சூர்யா பிறந்தநாளன்று இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது. படத்திற்கு ஜெய் பீம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. சான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
ஜெய் பீம் படத்தின் போஸ்டர்களில் சூர்யா வழக்கறிஞர் உடையில் காணப்படுகிறார். மேலும் பழங்குடியின மக்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது. எனவே தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யா இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.