ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழக திரையரங்குகளில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்திமிடத்தில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டிலேயே தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20, இரு சக்கர வாசகனங்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட்டு வருகிறது. நகராட்சிகளுக்கு ரூ.15 மற்றும் 7 என்றும், பேரூராட்சி கிராம பஞ்சாயத்துக்களில் ரூ.5 மற்றும் 3 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று இளவரசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பார்க்கிங் கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனால் கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற இந்த கோரிக்கையை ஏற்றால் அது பொதுநலனுக்கு எதிரானதாகி விடும். அதோடு அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.