சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து ஜெயம் ரவி, விஜய்சேதுபதி என அடுத்தடுத்து முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ். கைவசம் தமிழிலேயே மூன்று படங்களுக்கு குறையாமல் வைத்துள்ளார். அதுமட்டுமல்ல கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுந்தபுரம் படத்தில் நடித்த இவர் விரைவில் வெளியாகவுள்ள விராட பர்வம் படத்திலும் சற்று நீட்டிக்கப்பட்ட கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
ராணா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சாய்பல்லவி மற்றும் பிரியாமணி ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தில் சாய்பல்லவியும், பிரியாமணியும் நக்சலைட்டாக நடித்துள்ளது போல, நிவேதா பெத்துராஜும் நக்சலைட் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளாராம். வேணு உடுகுலா என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடித்துள்ளார்.