பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் |
தமிழில் 'ஆடுகளம்' மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தயாரிப்பாளராக மாறியுள்ளார். 'சூர்மா, பிகு' படங்களைத் தாயரித்த பிரஞ்சால் காந்தியா என்பவருடன் இணைந்து இந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
அது பற்றி தன்னுடைய டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “இந்தியத் திரைப்படத் துறையில் நான் இறங்கி கடந்த ஆண்டுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. என் வழியில் நான் நீந்தக் கற்றுக் கொள்வேன் என்பது எனக்குத் தெரியாது. பொதுமக்களிடம் தெரிந்த ஒரு மனிதரா, கனவு காணாத ஒருவருக்கு, என் மீது இத்தனை அன்பையும், என் வேலையின் மீது நம்பிக்கையையும் வைத்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றி.
இப்போது அதை திருப்பிச் செலுத்துவதற்கான நேரம். அதிக சக்தியுடன் அதிக பொறுப்பும் வருகிறது. சிறந்தவற்றில் சிறந்தவையாக கொடுக்க நான் முயற்சி செய்வேன். வெளியிலிருந்து பார்க்கும் பார்வையே சிறப்பானது. எனது வாழ்க்கையில் மற்றுமொரு அத்தியாயத்தை எழுதுகிறேன். 'அவுட்சைட் பிலிம்ஸ்' மூலம் இப்போது ஒரு தயாரிப்பாகவும் ஆகியுள்ளேன்,”.
இந்த அறிவிப்புடன் கம்பெனியின் லோகோ வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்..