தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தர்பார் படத்தில் கண்ணுல திமிரு பாடலில் ரஜினிகாந்த் நடனம் ஆடிக்கொண்டே எதிரிகளுடன் மோதும் சண்டை காட்சி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சண்டை காட்சியை வடிவமைத்தவர்கள் தெலுங்கில் பிரபலமாக உள்ள இரட்டை சகோதரர்களான ராம்-லட்சுமண் மாஸ்டர்கள் தான். அதன் பின்னர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் சண்டைகாட்சிகளை வடிவமைத்து வந்தவர்கள், தற்போது அந்தப்படத்தில் இருந்து விலகியுள்ளனர்.
ஆனால் இயக்குனருடனோ, ஹீரோக்களுடனோ இவர்களுக்கு எந்தவித மனஸ்தாபமும் இல்லை. இந்தப்படத்தில் இவர்களது மேற்பார்வையில் சண்டைக்காட்சிகளை படமாக்கியபோது ராம்சரணுக்கு காயம் ஏற்பட்டு அதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக பல நாட்கள் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீராகி அதே சண்டைக்காட்சியை படமாக்க மொத்தமாக தேதிகள் ஒதுக்கும்படி அழைப்பு வந்தபோது, வேறு படத்திற்காக அவர்கள் ஒப்பந்தம் ஆகிவிட்டதால் தான் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து விலகியுள்ளனராம்.