கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பிய ரஜினி, சிவா இயக்கத்தில் தான் நடித்துவரும் அண்ணாத்த படத்தின் மீதமுள்ள பணிகளை முடிக்கிறார். சில நாட்கள் படப்பிடிப்பும் டப்பிங் பணியும் இருக்கின்றன. வரும் 12ந்தேதி சென்னையில் இதற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. கோல்கட்டாவிலும் சில காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறது. எனவே ரஜினி கோல்கட்டா செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ந்தேதி வெளியாக உள்ளது.
தற்போது ரஜினியின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரஜினியின் 169வது படமாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதையடுத்து 170வது படமாக மருமகன் தனுஷ் இயக்கத்தில் நடிப்பார் என்றும் அந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.