பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு |

பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. ஏராளமான ஆவணப் படங்களை இயக்கி உள்ள இவர் செங்கடல் என்ற படத்தை இயக்கினார். தற்போது அவர் மாடத்தி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நீ ஸ்ட்ரீம் எனும் ஒடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பல தளங்களில் பைரசியாகவும் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இயக்குனர் லீனா மணிமேகலை தனது டுவிட்டரில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பைரசியில் படம் பாக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்.கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்களை அதைவிட கோடிகளைக் கொடுத்து வாங்கிக் கொள்கின்றன நிறுவனங்கள்.மாடத்தி படத்தின் நிலவரம் வேறு. நீ ஸ்ட்ரீம் தளத்தில் நீங்கள் டிக்கெட் வாங்கிப் பார்த்தால் மட்டுமே நான் அடுத்தமாதம் வீட்டுவாடகை கட்டமுடியும். என்று கூறியுள்ளார்.




