இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. ஏராளமான ஆவணப் படங்களை இயக்கி உள்ள இவர் செங்கடல் என்ற படத்தை இயக்கினார். தற்போது அவர் மாடத்தி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நீ ஸ்ட்ரீம் எனும் ஒடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பல தளங்களில் பைரசியாகவும் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இயக்குனர் லீனா மணிமேகலை தனது டுவிட்டரில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பைரசியில் படம் பாக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்.கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்களை அதைவிட கோடிகளைக் கொடுத்து வாங்கிக் கொள்கின்றன நிறுவனங்கள்.மாடத்தி படத்தின் நிலவரம் வேறு. நீ ஸ்ட்ரீம் தளத்தில் நீங்கள் டிக்கெட் வாங்கிப் பார்த்தால் மட்டுமே நான் அடுத்தமாதம் வீட்டுவாடகை கட்டமுடியும். என்று கூறியுள்ளார்.