பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த ஒருவர் தனக்கு எதிராக செயல்பட்டது குறித்து பேட்டி ஒன்றில் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : 'ரசிகர்களிடம் பணத்தை பெற்று கொண்டு என்னைப்பற்றிய பர்சனல் விவரங்களை கூறுவது போன்ற செயல்களை என்னுடன் இருந்து கொண்டே, எனக்கு மிகவும் நம்பிக்கையான நபரே இதுமாதிரி செய்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது புகார் அளிக்க பலர் கூறினார்கள். என்றாலும் தப்பு நடந்து விட்டது. இனிமேல் நாம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன். என்னை போல மற்றவர்களுக்கு எதுவும் இதுபோன்று நேரக்கூடாது என்பதற்காக இதனை நான் சொல்கிறேன். எனவே யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது? என்றே எனக்கு புரியவில்லை' என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.