'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் புதிய திரைப்படத்திற்காக விஷால் ஒப்பந்தமானார். பிரபல குறும்படமான, “எது தேவையோ அதுவே தர்மம்!” என்கிற குறும்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் சரவணன் அந்த படத்துக்காக பல விருதுகளை பெற்று இருந்தார். இந்நிலையில் தான் இவர் விஷால் நடிக்கும் விஷால் 31 என்கிற இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தெலுங்கானா மாநிலத்தில் இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அங்கு மீண்டும் விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையின்போது நடிகர் விஷால் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.