ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பிரபு நடித்த உழவன் படத்தில் அறிமுகமான ரம்பா, அதைத் தொடர்ந்து கார்த்திக்குடன் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் பிரபலமானார். ஒரு பத்து ஆண்டுகளுக்கு தமிழ்,தெலுங்கு படங்களின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடிய ரம்பா, 2010ல் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். ரம்பாவிற்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகியிருந்தபோதும் இன்ஸ்டா கிராமில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரை பின்தொடரும் பாலோயர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை தொட்டுள்ளது. அதையடுத்து வெளியிட்டுள்ள வீடியோவில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஆறு மொழிகளில் பாலோயர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரம்பா.
மேலும் சினிமாவில் நடிக்க தொடங்கி 30 ஆண்டுகள் நெருங்கிவிட்டது. இந்தனை ஆண்டுகளில் ரசிகர்களின் அன்பு ஒரு போதும் குறைந்தது இல்லை. சினிமாவில் நான் இல்லாமல் இருக்காமல். ஆனால் உங்களுடன் எப்போதும் நெருக்கமாக உள்ளேன். அனைவருக்கும் நன்றி' என்கிறார் ரம்பா.