சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
பிரபு நடித்த உழவன் படத்தில் அறிமுகமான ரம்பா, அதைத் தொடர்ந்து கார்த்திக்குடன் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் பிரபலமானார். ஒரு பத்து ஆண்டுகளுக்கு தமிழ்,தெலுங்கு படங்களின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடிய ரம்பா, 2010ல் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். ரம்பாவிற்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகியிருந்தபோதும் இன்ஸ்டா கிராமில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரை பின்தொடரும் பாலோயர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை தொட்டுள்ளது. அதையடுத்து வெளியிட்டுள்ள வீடியோவில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஆறு மொழிகளில் பாலோயர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரம்பா.
மேலும் சினிமாவில் நடிக்க தொடங்கி 30 ஆண்டுகள் நெருங்கிவிட்டது. இந்தனை ஆண்டுகளில் ரசிகர்களின் அன்பு ஒரு போதும் குறைந்தது இல்லை. சினிமாவில் நான் இல்லாமல் இருக்காமல். ஆனால் உங்களுடன் எப்போதும் நெருக்கமாக உள்ளேன். அனைவருக்கும் நன்றி' என்கிறார் ரம்பா.