'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

பிரபு நடித்த உழவன் படத்தில் அறிமுகமான ரம்பா, அதைத் தொடர்ந்து கார்த்திக்குடன் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் பிரபலமானார். ஒரு பத்து ஆண்டுகளுக்கு தமிழ்,தெலுங்கு படங்களின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடிய ரம்பா, 2010ல் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். ரம்பாவிற்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகியிருந்தபோதும் இன்ஸ்டா கிராமில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரை பின்தொடரும் பாலோயர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை தொட்டுள்ளது. அதையடுத்து வெளியிட்டுள்ள வீடியோவில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஆறு மொழிகளில் பாலோயர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரம்பா.
மேலும் சினிமாவில் நடிக்க தொடங்கி 30 ஆண்டுகள் நெருங்கிவிட்டது. இந்தனை ஆண்டுகளில் ரசிகர்களின் அன்பு ஒரு போதும் குறைந்தது இல்லை. சினிமாவில் நான் இல்லாமல் இருக்காமல். ஆனால் உங்களுடன் எப்போதும் நெருக்கமாக உள்ளேன். அனைவருக்கும் நன்றி' என்கிறார் ரம்பா.




