படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
பிரபு நடித்த உழவன் படத்தில் அறிமுகமான ரம்பா, அதைத் தொடர்ந்து கார்த்திக்குடன் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் பிரபலமானார். ஒரு பத்து ஆண்டுகளுக்கு தமிழ்,தெலுங்கு படங்களின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடிய ரம்பா, 2010ல் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். ரம்பாவிற்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகியிருந்தபோதும் இன்ஸ்டா கிராமில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரை பின்தொடரும் பாலோயர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை தொட்டுள்ளது. அதையடுத்து வெளியிட்டுள்ள வீடியோவில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஆறு மொழிகளில் பாலோயர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரம்பா.
மேலும் சினிமாவில் நடிக்க தொடங்கி 30 ஆண்டுகள் நெருங்கிவிட்டது. இந்தனை ஆண்டுகளில் ரசிகர்களின் அன்பு ஒரு போதும் குறைந்தது இல்லை. சினிமாவில் நான் இல்லாமல் இருக்காமல். ஆனால் உங்களுடன் எப்போதும் நெருக்கமாக உள்ளேன். அனைவருக்கும் நன்றி' என்கிறார் ரம்பா.