ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். 'பாகுபலி' படங்கள் வந்த பிறகு ஷங்கரிடமிருந்த அந்தப் பெயர் தெலுங்கு இயக்குனரான ராஜமவுலிக்குப் போய்விட்டது.
தென்னிந்தியாவின் முதல் பிரம்மாண்ட இயக்குனர் தான்தான் என்பதை நிரூபிக்க ஷங்கர் அடுத்து தெலுங்கு, ஹிந்திப் பக்கம் தாவிவிட்டார். தனது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தை தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டுப் போய்விட்டார். நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகுதான் இப்படத்தின் நிலைமை என்னவென்று தெரியும்.
இதனிடையே, தெலுங்கு, ஹிந்தியில் அடுத்து இயக்க உள்ள படங்களுக்கான வேலைகளில் ஷங்கர் ஏற்கெனவே பிஸியாகிவிட்டார். தெலுங்கில் ராம் சரண் நடிக்க அவர் இயக்கப் போகும் படத்திற்கும், ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்க உள்ள 'அந்நியன்' பட ரீமேக்கிற்கும் பாலிவுட்டின் பிரபலமான நாயகியான கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளாராம் ஷங்கர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கியாரா அத்வானியின் பிறந்தநாளான ஜுலை 31 அன்று வெளிவரும் என்கிறார்கள்.
தற்போது, “ஷெர்ஷா, பூல் புலையா, ஜக் ஜக் ஜீயோ' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார் கியாரா.




