பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதைத் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பிரபுதேவாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தெலுங்கிலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கத்திலும் நிவேதா பெத்துராஜ் தீவிரமாக இயங்கி வருகிறார். அதில் அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. அதில், சுவிக்கி ஆன்லைன் உணவு டெலிவரி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டை ஆர்டர் செய்ததாகவும், சாப்பாட்டை சாப்பிட முயன்றபோது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் நிவேதா பெத்துராஜ் இணைத்துள்ளார்.
இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் கூறியிருப்பதாவது, சுவிக்கி உணவு டெலிவரி நிறுவனம் மற்றும் உணவகங்கள் என்ன தரத்தை தற்போது பின்பற்றுகின்றன என தெரியவில்லை. இதுவரை இரண்டு முறை எனது உணவில் கரப்பான் பூச்சியை கண்டெடுத்துள்ளேன். இத்தகைய உணவகங்களில் தினமும் சோதனை நடத்தி , தரமாக இல்லையென்றால் அதிக அபராதம் விதிக்க வேண்டும். இந்தியா முழுவது அந்த நிறுவனம் உணவு டெலிவரி செய்துவரும் நிலையில், தங்களது செயலியில் தரமான உணவகங்களை இணைக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிவேதா பெத்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.