என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் சண்டைக்காட்சிகளிலும் மற்றும் அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்கும் படங்களிலும் அவர்களுக்கு டூப் ஆக நடிப்பதற்கு என்று சிலர் இருப்பார்கள். அவர்கள் நடிகர்களாகவோ அல்லது ஸ்டண்ட் கலைஞர்களாகவோ இருப்பது வழக்கம். ஆனால் மலையாளத்தில் மோகன்லால் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்த ராவண பிரபு என்கிற படத்தில் அவருக்கு டூப் ஆக நடித்தவர், ராஜன் கோயிலாண்டி என்கிற உதவி கலை இயக்குனர்.
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக, சினிமாவில் கலை இயக்குனர் பிரிவில் பணியாற்றி வந்த ராஜன் தனக்கென எதுவும் பெரிதாக சேர்த்து வைக்கவில்லை. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக எந்த வேலைகளும் நடைபெறாத நிலையில், மாவூர் என்கிற பகுதியில் உள்ள பார் ஒன்றில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்துள்ளார் ராஜன். சினிமாவில் வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தரம் என எதுவும் இல்லை, அடுத்த வேளை உணவு வேண்டுமென்றால் எந்த வேலையும் பார்க்க தயங்கக்கூடாது என்பதால்தான் செக்யூரிட்டி பணியில் சேர்ந்ததாக கூறுகிறார் ராஜன்.