ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் சண்டைக்காட்சிகளிலும் மற்றும் அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்கும் படங்களிலும் அவர்களுக்கு டூப் ஆக நடிப்பதற்கு என்று சிலர் இருப்பார்கள். அவர்கள் நடிகர்களாகவோ அல்லது ஸ்டண்ட் கலைஞர்களாகவோ இருப்பது வழக்கம். ஆனால் மலையாளத்தில் மோகன்லால் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்த ராவண பிரபு என்கிற படத்தில் அவருக்கு டூப் ஆக நடித்தவர், ராஜன் கோயிலாண்டி என்கிற உதவி கலை இயக்குனர்.
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக, சினிமாவில் கலை இயக்குனர் பிரிவில் பணியாற்றி வந்த ராஜன் தனக்கென எதுவும் பெரிதாக சேர்த்து வைக்கவில்லை. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக எந்த வேலைகளும் நடைபெறாத நிலையில், மாவூர் என்கிற பகுதியில் உள்ள பார் ஒன்றில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்துள்ளார் ராஜன். சினிமாவில் வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தரம் என எதுவும் இல்லை, அடுத்த வேளை உணவு வேண்டுமென்றால் எந்த வேலையும் பார்க்க தயங்கக்கூடாது என்பதால்தான் செக்யூரிட்டி பணியில் சேர்ந்ததாக கூறுகிறார் ராஜன்.




