ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலங்கானா மாநிலத்தில் இன்று முதல் பொது முடக்கத் தளர்வு மாற்றப்பட்டுள்ளது. தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் மட்டுமே இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுகிறது. இதனால், சினிமா, டிவி தொடர் படப்பிடிப்புகளை மீண்டும் ஆரம்பிக்க தெலுங்குத் திரையுலகினர் முடிவு செய்துள்ளார்களாம். எப்படியும் இந்த வாரம் தளர்வுகள் கிடைக்கும் என நினைத்து கடந்த வாரத்திலேயே அதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
தமிழகத்தில் இன்னும் சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அடுத்த வாரம் முதல் அனுமதி அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருந்தாலும் பெரும்பாலான தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெறதுவதை விட ஐதராபாத்தில் தான் நடக்கிறது. எனவே, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் ஐதராபாத்தில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காகவே முன்னேற்பாடாக பல இளம் நடிகர்கள், நடிகைகள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு வருகிறார்களாம். படப்பிடிப்புகள் ஆரம்பமானாலும் தியேட்டர்களுக்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஆகும் என்கிறார்கள்.