தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலங்கானா மாநிலத்தில் இன்று முதல் பொது முடக்கத் தளர்வு மாற்றப்பட்டுள்ளது. தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் மட்டுமே இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுகிறது. இதனால், சினிமா, டிவி தொடர் படப்பிடிப்புகளை மீண்டும் ஆரம்பிக்க தெலுங்குத் திரையுலகினர் முடிவு செய்துள்ளார்களாம். எப்படியும் இந்த வாரம் தளர்வுகள் கிடைக்கும் என நினைத்து கடந்த வாரத்திலேயே அதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
தமிழகத்தில் இன்னும் சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அடுத்த வாரம் முதல் அனுமதி அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருந்தாலும் பெரும்பாலான தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெறதுவதை விட ஐதராபாத்தில் தான் நடக்கிறது. எனவே, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் ஐதராபாத்தில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காகவே முன்னேற்பாடாக பல இளம் நடிகர்கள், நடிகைகள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு வருகிறார்களாம். படப்பிடிப்புகள் ஆரம்பமானாலும் தியேட்டர்களுக்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஆகும் என்கிறார்கள்.