மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ்நாட்டில் எந்த ஒரு முதல்வர் பதவியேற்றாலும், அவர்களைத் தேடிச் சென்று வாழ்த்தி, பாராட்டி மகிழ்வது தமிழ்த் திரையுலகில் உள்ள முக்கிய சங்களின் கடமையாக இருக்கும். புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப் போவதாக ஏற்கெனவே திரையுலகத்தைச் சேர்ந்த சில சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஏறக்குறைய அனைத்து நடிகர்களும் முதல்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். சிலர் நேரடியாகவே சென்று பார்த்துள்ளார்கள்.
முதல்வரிடம் நன்மதிப்பைப் பெறுவதற்காக வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் சமயங்களில் முதல்வரைச் சந்தித்து நிவாரண நிதி வழங்குவதை சில நடிகர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். தற்போது கொரோனா பேரிடர் நாட்டையே உலுக்கி வருகிறது. அதனால், முதல்வரைச் சந்தித்து அவரது நிவாரண நிதிக்கு நிதி வழங்கும் திட்டத்தை சீக்கிரமே யாராவது ஆரம்பித்து வைப்பார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு திரையுலகத்தில் உள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் முதல்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால், விஜய், அஜித் ஆகியோர் இன்னும் எந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கவில்லை. இன்னும் சில நாட்களில் முதல்வரை சந்திக்க பல சினிமா பிரபலங்கள் முயற்சிப்பார்கள் என்றே தெரிகிறது.