சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? | பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு படம் திரைக்கு வருவதால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்தபோதும் சரியான பாதுகாப்புடன் தொடர்ந்து நடித்து வருகிறார் ரஜினி. அவருக்கான காட்சிகள் இன்னும் சில தினங்களில் படமாக்கப்பட்டுவிடும் என்பதால் அதையடுத்து சென்னை திரும்புகிறார்.
மேலும், கொரோனா இரண்டாவது அலை முடிந்ததும் மீண்டும் புதிய படங்களை நடிக்க திட்டமிட்டுள்ள ரஜினி, தற்போது கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரிடமும் கதை கேட்டு வைத்திருப்பவர், முதலாவதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் ஜூலை மாதத்திற்கு பிறகு நடிப்பார் என்றும் போயஸ்கார்டன் வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது.