ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு படம் திரைக்கு வருவதால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்தபோதும் சரியான பாதுகாப்புடன் தொடர்ந்து நடித்து வருகிறார் ரஜினி. அவருக்கான காட்சிகள் இன்னும் சில தினங்களில் படமாக்கப்பட்டுவிடும் என்பதால் அதையடுத்து சென்னை திரும்புகிறார்.
மேலும், கொரோனா இரண்டாவது அலை முடிந்ததும் மீண்டும் புதிய படங்களை நடிக்க திட்டமிட்டுள்ள ரஜினி, தற்போது கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரிடமும் கதை கேட்டு வைத்திருப்பவர், முதலாவதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் ஜூலை மாதத்திற்கு பிறகு நடிப்பார் என்றும் போயஸ்கார்டன் வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது.