2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! |

பொதுவாக சினிமா நட்சத்திரங்களுக்கு, குறிப்பாக நடிகைகளுக்கு எப்போதுமே, படப்பிடிப்பு, திரைப்பட விழாக்கள் என பிசியாகவே இருந்து பழகியவர்களுக்கு இந்த கொரோனா காலகட்டம் மிக சோதனையான ஒன்றாகவே அமைந்துள்ளது. கொரோனா முதல் அலையில் இருந்து மீண்டு, ஒருவழியாக சகாஜ் நிலைக்கு திரும்ப ஆரம்பித்தவர்களை கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது மீண்டும் முடக்கி போட்டுள்ளது.
வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஒவ்வொருவரும், யோகா, தோட்ட பராமரிப்பு என ஒவ்வொரு விதமான முயற்சியில் இறங்கியுள்ளனர். நடிகை காஜல் அகர்வாலோ நூலையும் ஊசியையும் கையில் எடுத்து பின்னல் வேலைகளில் இறங்கிவிட்டார்.
இதுகுறித்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், “பொதுவாகவே இதுபோன்ற சமயங்களில் ஒரு ஆதரவின்மையும் கவலையும் ஏற்படுவது இயல்பு.. அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க நான் பின்னல் வேலையை துவங்கி விட்டேன்., நமக்கு பிடித்தவர்களுக்காக நம் கையாலேயே விதவிதமான பின்னல் வேலைப்பாடுகளை செய்வதும் ஒரு சுகமான அனுபவம் தானே..” என கூறியுள்ளார்.