உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! | 'லீடர்' ஆக மாறும் லெஜண்ட் சரவணன் ! | நானி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறாரா தமன்னா? | ஜீவாவிற்கு திருப்புமுனையாக அமைந்த 'தலைவர் தம்பி தலைமையில்' | வெறுப்புணர்வு உங்களை குருடாக்கியது: ஏ.ஆர்.ரஹ்மான் மீது கங்கனா பகீர் குற்றச்சாட்டு | முதன்முறையாக மலையாள படத்திற்கு இசையமைத்துள்ள சங்கர், எஷான், லாய் | 'மாநாடு' படத்தில் நடிக்க மறுத்தேன் ; சிவகார்த்திகேயன் சொன்ன புது தகவல் | மூன்று வருடங்களுக்குப் பிறகு 'ஆசை'யுடன் வெள்ளித்திரைக்கு திரும்பும் கதிர் | கார் பயணத்தின் போது 20 வருடங்களாக இந்த இரண்டு விஷயங்களை கவனமாக தவிர்க்கும் விவேக் ஓபராய் |

பொதுவாக சினிமா நட்சத்திரங்களுக்கு, குறிப்பாக நடிகைகளுக்கு எப்போதுமே, படப்பிடிப்பு, திரைப்பட விழாக்கள் என பிசியாகவே இருந்து பழகியவர்களுக்கு இந்த கொரோனா காலகட்டம் மிக சோதனையான ஒன்றாகவே அமைந்துள்ளது. கொரோனா முதல் அலையில் இருந்து மீண்டு, ஒருவழியாக சகாஜ் நிலைக்கு திரும்ப ஆரம்பித்தவர்களை கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது மீண்டும் முடக்கி போட்டுள்ளது.
வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஒவ்வொருவரும், யோகா, தோட்ட பராமரிப்பு என ஒவ்வொரு விதமான முயற்சியில் இறங்கியுள்ளனர். நடிகை காஜல் அகர்வாலோ நூலையும் ஊசியையும் கையில் எடுத்து பின்னல் வேலைகளில் இறங்கிவிட்டார்.
இதுகுறித்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், “பொதுவாகவே இதுபோன்ற சமயங்களில் ஒரு ஆதரவின்மையும் கவலையும் ஏற்படுவது இயல்பு.. அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க நான் பின்னல் வேலையை துவங்கி விட்டேன்., நமக்கு பிடித்தவர்களுக்காக நம் கையாலேயே விதவிதமான பின்னல் வேலைப்பாடுகளை செய்வதும் ஒரு சுகமான அனுபவம் தானே..” என கூறியுள்ளார்.




