ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

தெலுங்கில் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் படம் புஷ்பா. செம்மர கடத்தலின் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். முக்கிய வேடத்தில் பஹத் பாசில் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்ததால் அவர் தற்சமயம் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஒய்வு எடுக்கிறார்.
ஆனாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.. காரணம் பஹத் பாசில் கொடுத்த தேதிகளை வீணாக்க விரும்பாத தயாரிப்பு நிறுவனம், அல்லு அர்ஜுனுடம் காம்பினேஷன் இல்லாத, அதேசமயம் பஹத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைந்து படமாக்கிவிட விரும்பியது..
ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும்போது படபிடிப்பை அவசியம் நடத்தத்தான், வேண்டுமா என சோஷியல் மீடியாவில் சர்ச்சை எழுந்தது, இதனை தொடர்ந்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது புஷ்பா படக்குழு. இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் ரிலீஸாக உள்ளது.