டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நிசப்தம் படத்தை அடுத்து தெலுங்கில் யு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கும் படத்தில் நவீன்பொலிஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் அனுஷ்கா. இந்தநிலையில், அவரைப்பற்றி மீண்டும் ஒரு திருமண செய்தி டோலிவுட்டில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.
அதாவது, பாகுபலி படத்தில் நடித்த பிறகு அப்பட நாயகனாக பிரபாசும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதையடுத்து அவர்கள் அதை மறுத்ததோடு இருவருமே நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புளி வைத்தனர்.
அவ்வப்போது அனுஷ்கா அவரை திருமணம் செய்ய போகிறார், இவரை திருமணம் செய்ய போகிறார் என செய்திகள் வரும். பின்னர் அது அப்படியே அமுங்கி போகும். இந்நிலையில் தற்போது துபாயை சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும், திருமணத்திற்கு பிறகு துபாயில் அனுஷ்கா குடியேறி விடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனபோதும் வழக்கம்போல் இந்த செய்தி குறித்தும் அனுஷ்கா எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாக உள்ளார்.




