ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நிசப்தம் படத்தை அடுத்து தெலுங்கில் யு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கும் படத்தில் நவீன்பொலிஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் அனுஷ்கா. இந்தநிலையில், அவரைப்பற்றி மீண்டும் ஒரு திருமண செய்தி டோலிவுட்டில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.
அதாவது, பாகுபலி படத்தில் நடித்த பிறகு அப்பட நாயகனாக பிரபாசும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதையடுத்து அவர்கள் அதை மறுத்ததோடு இருவருமே நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புளி வைத்தனர்.
அவ்வப்போது அனுஷ்கா அவரை திருமணம் செய்ய போகிறார், இவரை திருமணம் செய்ய போகிறார் என செய்திகள் வரும். பின்னர் அது அப்படியே அமுங்கி போகும். இந்நிலையில் தற்போது துபாயை சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும், திருமணத்திற்கு பிறகு துபாயில் அனுஷ்கா குடியேறி விடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனபோதும் வழக்கம்போல் இந்த செய்தி குறித்தும் அனுஷ்கா எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாக உள்ளார்.