மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
குற்றம் 23-க்கு பின் இயக்குனர் அறிவழகன், நடிகர் அருண் விஜய் கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாகி உள்ளது. ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் நடித்துள்ளனர். பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். இப்போது படத்திற்கு ‛பார்டர்' என பெயரிட்டுள்ளனர்.
‛‛இது ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படம். இதை முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லராக கொடுத்திருக்கிறேன். எனது முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும். ஸ்பை த்ரில்லர் என்றால் தேசபக்தி, தீவிரவாதம் என்று எதிர்பார்ப்பார்கள். கண்டிப்பாக தேசபக்தியை வேறொரு கோணத்தில் சொல்லியிருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் மக்கள் திரையரங்கிற்கு நம்பி படம் பார்ப்பதற்கு ஏற்ற படமாக இருக்கும் என்கிறார் அறிவழகன்.