ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு-2 என பல படங்களில் நாயகியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்து விட்டதாக பெங்களூர் அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் இவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் நிகில். இவரது ஓட்டலில் 2016ம் ஆண்டு ரூ. 50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்காக அவர் எனக்கு மாதந்தோறும் ரூ. 1 லட்சம் தருவதாக கூறியிருந்தார். ஆனால் அவர் இப்போதுவரை மாதந்தோறும் ஒரு லட்சம் தரவில்லை. நான் கொடுத்த ரூ. 50 லட்சத்தையும் திருப்பித்தர மறுக்கிறார். அதனால் அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார் நிக்கி கல்ராணி. இந்த புகாரின் அடிப்படையில் ஓட்டல் உரிமையாளர் நிகிலிடம் அம்ருதஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.