நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு-2 என பல படங்களில் நாயகியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்து விட்டதாக பெங்களூர் அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் இவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் நிகில். இவரது ஓட்டலில் 2016ம் ஆண்டு ரூ. 50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்காக அவர் எனக்கு மாதந்தோறும் ரூ. 1 லட்சம் தருவதாக கூறியிருந்தார். ஆனால் அவர் இப்போதுவரை மாதந்தோறும் ஒரு லட்சம் தரவில்லை. நான் கொடுத்த ரூ. 50 லட்சத்தையும் திருப்பித்தர மறுக்கிறார். அதனால் அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார் நிக்கி கல்ராணி. இந்த புகாரின் அடிப்படையில் ஓட்டல் உரிமையாளர் நிகிலிடம் அம்ருதஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.